Social Icons

Pages

Friday, October 11, 2013

இஞ்சி புலாவ்!


என்னென்ன தேவை?

உதிரியாக வடித்த சாதம் - 1 கப்,
துருவிய இஞ்சி - 1 கப்,
பச்சை மிளகாய் - 4,
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது,
கடுகு - 1 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?  

கடாயை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெயை ஊற்றிக் காய்ந்த பின் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை  மிளகாய் போட்டுத்  தாளிக்கவும். அதில் துருவிய இஞ்சியைப் போட்டு வதக்கவும். மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், தேவையான உப்பு சேர்த்துக் கிளறி அடுப்பை  அணைக்கவும்.
அதில் உதிரியாக வடித்த சாதத்தைச் சேர்த்து நன்கு கிளறவும். எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.

No comments:

Post a Comment

 

உங்கள் விளம்பரங்கள்

some_text

Sample text

பொன்மொழிகள்

ழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை. பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை. பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒருவகை. அப்படிச் சிந்திக்க மறுப்பபவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒருவகை. மது அருந்துவது மக்கள் அறியாமலேயே எத்தகைய கேடுகளை அவர்களுக்கு உண்டாக்குமோ, அது போல மக்கள்தொகைப் பெருக்கமும் நாம் அறியாமலேயே சமுதாயத்திற்கு கேடு உண்டாக்கக் கூடியவை. சீர்திருத்தக்காரன் என்றால் கடவுளை நம்பாதவன், பண்பில்லாதவன், அடக்கமில்லாதவன், அகந்தையுடையவன் என்றெல்லாம் பொருள் கொள்ளுதல் கூடாது. சாதி, மத, இன, மொழி முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட தேசியக் கண்ணோட்டமும், ஒற்றுமை மனப்பான்மையும்தான் நம் நாட்டை வளமிக்கதாக உருவாக்க வழி வகுக்கும். ஒரு மனிதன் இறந்தபிறகு அவனை அந்த நாடு மறக்காமல் போற்றினால்தான் அவன் புகழ் பெற்றவனாகின்றான். எல்லோரும் நமக்கு வேண்டியவர்கள்தான்; ஆனால் எங்கே யாரை வைக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். குடும்பத்தில் கலகம் விளைவிப்பவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. ஒரு மனிதனின் எண்ணமும், நோக்கமும் மட்டுமே நல்லதாக இருந்தால் மட்டும் போதாது. செயலும், பண்பாட்டுடன் இருக்க வேண்டும் இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் நாட்டில் நல்லவை நடக்கு
ம்.