Social Icons

Pages

Friday, October 11, 2013

சால்ட் அண்ட் பெப்பர் மஷ்ரூம்


என்னென்ன தேவை?

ஃப்ரெஷ்ஷான மஷ்ரூம் - 250 கிராம்,
கார்ன்ஃப்ளார் - மைதா - தலா 50 கிராம்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிது,
பொடித்த இஞ்சி, பூண்டு -  தலா 1 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - அரை டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய செலரி தழைகள் - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப,
சிவப்பு மிளகாய் விழுது (சிவப்பு மிளகாயை வேக வைத்து, அரைத்தது) - சிறிது,
சோயா சாஸ், வெள்ளை மிளகுத் தூள் - சிறிது,
சில்லி ஃப்ளேக்ஸ் (தேவைப்பட்டால்) - சிறிது,
எண்ணெய் - தேவைக்கேற்ப,
வெங்காயத் தாள் - சிறிது.

எப்படிச் செய்வது?

காளானை கழுவி, இரண்டிரண்டாக வெட்டிக் கொள்ளவும். அதை மைதா, கார்ன்ஃப்ளார், உப்பு கலவையில் பிரட்டி, எண்ணெயில்  பொரித்துத் தனியே  வைக்கவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், செலரி சேர்த்துப்  பச்சை வாடை போக நன்கு வதக்கவும்.
  பிறகு மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். குறைந்த தணலில் வைத்து, சோயா சாஸ்,  வெள்ளை மிளகுத் தூள் சேர்த்துக் கிளறவும்.
தேவையான  உப்பு சேர்த்து, பொரித்து வைத்துள்ள காளான் சேர்த்துக் கிளறி, தேவைப் பட்டால் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து, கடைசியாக வெங்காயத் தாள் தூவிப்  பரிமாறவும்.


No comments:

Post a Comment

 

உங்கள் விளம்பரங்கள்

some_text

Sample text

பொன்மொழிகள்

ழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை. பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை. பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒருவகை. அப்படிச் சிந்திக்க மறுப்பபவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒருவகை. மது அருந்துவது மக்கள் அறியாமலேயே எத்தகைய கேடுகளை அவர்களுக்கு உண்டாக்குமோ, அது போல மக்கள்தொகைப் பெருக்கமும் நாம் அறியாமலேயே சமுதாயத்திற்கு கேடு உண்டாக்கக் கூடியவை. சீர்திருத்தக்காரன் என்றால் கடவுளை நம்பாதவன், பண்பில்லாதவன், அடக்கமில்லாதவன், அகந்தையுடையவன் என்றெல்லாம் பொருள் கொள்ளுதல் கூடாது. சாதி, மத, இன, மொழி முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட தேசியக் கண்ணோட்டமும், ஒற்றுமை மனப்பான்மையும்தான் நம் நாட்டை வளமிக்கதாக உருவாக்க வழி வகுக்கும். ஒரு மனிதன் இறந்தபிறகு அவனை அந்த நாடு மறக்காமல் போற்றினால்தான் அவன் புகழ் பெற்றவனாகின்றான். எல்லோரும் நமக்கு வேண்டியவர்கள்தான்; ஆனால் எங்கே யாரை வைக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். குடும்பத்தில் கலகம் விளைவிப்பவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. ஒரு மனிதனின் எண்ணமும், நோக்கமும் மட்டுமே நல்லதாக இருந்தால் மட்டும் போதாது. செயலும், பண்பாட்டுடன் இருக்க வேண்டும் இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் நாட்டில் நல்லவை நடக்கு
ம்.