Social Icons

Pages

Friday, March 11, 2016

கோழி ரசம்


தேதி : புதன், 09/03/2016 - 01:44
ஆயத்த நேரம் : 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 20 நிமிடங்கள்
பரிமாறும் அளவு : 4 நபர்கள்

  • எலும்புடன் கூடிய சிக்கன் துண்டுகள் - 1/4 கிலோ
  • நல்லெண்ணெய் -5 ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் - 1 கப்
  • தக்காளி - 2
  • மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்
  • மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
  • பூண்டு - 10 பல்
  • கொத்தமல்லித் தழை - சிறிதளவு
  • கறிவேப்பிலை - 10 இலைகள்
  • உப்பு - தேவைக்கேற்ப
  • வறுத்து பொடிக்க
  • மிளகு - 1 டீஸ்பூன்
  • சீரகம் - 1/2 டீஸ்பூன்
  • சோம்பு - 1/4 டீஸ்பூன்
  • தனியா - 1/2 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 
  •  
    வாணலியில் பொடித்த மிளகு, சீரகம், சோம்பு, தனியா, காய்ந்த மிளகாய் சேர்த்து எண்ணெய் விடாமல் சிறிது நேரம் வறுத்து பொடி செய்யவும். பூண்டை தட்டி வைக்கவும். குக்கரில் எண்ணெய் சேர்த்து சிக்கனை லேசாக வதக்கவும்.
    இத்துடன் கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தட்டிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
    ரசத்திற்கு தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து சிக்கனை 2 விசில் வரை வேக வைக்கவும்.
    சிக்கன் வெந்ததும் அரைத்து வைத்திருக்கும் பொடியைச் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.
    கொத்தமல்லித்தழை தூவவும். கோழி ரசம் ரெடி.
  •  
  •  

No comments:

Post a Comment

 

உங்கள் விளம்பரங்கள்

some_text

Sample text

பொன்மொழிகள்

ழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை. பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை. பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒருவகை. அப்படிச் சிந்திக்க மறுப்பபவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒருவகை. மது அருந்துவது மக்கள் அறியாமலேயே எத்தகைய கேடுகளை அவர்களுக்கு உண்டாக்குமோ, அது போல மக்கள்தொகைப் பெருக்கமும் நாம் அறியாமலேயே சமுதாயத்திற்கு கேடு உண்டாக்கக் கூடியவை. சீர்திருத்தக்காரன் என்றால் கடவுளை நம்பாதவன், பண்பில்லாதவன், அடக்கமில்லாதவன், அகந்தையுடையவன் என்றெல்லாம் பொருள் கொள்ளுதல் கூடாது. சாதி, மத, இன, மொழி முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட தேசியக் கண்ணோட்டமும், ஒற்றுமை மனப்பான்மையும்தான் நம் நாட்டை வளமிக்கதாக உருவாக்க வழி வகுக்கும். ஒரு மனிதன் இறந்தபிறகு அவனை அந்த நாடு மறக்காமல் போற்றினால்தான் அவன் புகழ் பெற்றவனாகின்றான். எல்லோரும் நமக்கு வேண்டியவர்கள்தான்; ஆனால் எங்கே யாரை வைக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். குடும்பத்தில் கலகம் விளைவிப்பவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. ஒரு மனிதனின் எண்ணமும், நோக்கமும் மட்டுமே நல்லதாக இருந்தால் மட்டும் போதாது. செயலும், பண்பாட்டுடன் இருக்க வேண்டும் இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் நாட்டில் நல்லவை நடக்கு
ம்.