Social Icons

Pages

Thursday, October 10, 2013

பத்தியக் கஞ்சி


  • புழுங்கலரிசி - 1/4 கப்
  • பாசிப்பயறு - 2 தேக்கரண்டி
  • வெந்தயம் - 1 தேக்கரண்டி
  • சின்ன வெங்காயம் - 5 - 6
  • வெள்ளைப் பூண்டு - 2
  • மோர் - 1 - 1.5 கப்
  • உப்பு - தேவையான அளவு

  • வெங்காயம், பூடு இரண்டையும் தோலுரித்து, பொடியாக நறுக்கவும்.
  • பாசிப்பயறையும் வெந்தயத்தையும் முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.
  • காலையில் புழுங்கலரிசியை களைந்து, அத்துடன் ஊற வைத்த வெந்தயம், பாசிப்பயறு, நறுக்கிய வெங்காயம், பூடு, எல்லாவற்றையும் சேர்த்து, 2 கப்   தண்ணீர் ஊற்றி, குக்கரில் 4-5            விசில் வர விடவும்.
  • விசில் அடங்கியதும், குக்கரைத் திறந்து, குழைவாக வெந்திருக்கும் கஞ்சியை, நன்றாக மசிக்கவும்.
  • ஆறியதும், உப்பும் மோரும் கலந்து, பருகக் கொடுக்கவும்.

Note:

தொடர்ந்த வயிற்று வலி, அல்சர் இருப்பவர்களுக்கு, இந்தக் கஞ்சி மிகச் சிறப்பான உணவாகும். காலையில் டிஃபனுக்கு பதிலாக, இந்தக் கஞ்சியைக் குடிக்க வேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்குக் குடித்தால், வயிற்று வலி, புண் குணமாகும்.

No comments:

Post a Comment

 

உங்கள் விளம்பரங்கள்

some_text

Sample text

பொன்மொழிகள்

ழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை. பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை. பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒருவகை. அப்படிச் சிந்திக்க மறுப்பபவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒருவகை. மது அருந்துவது மக்கள் அறியாமலேயே எத்தகைய கேடுகளை அவர்களுக்கு உண்டாக்குமோ, அது போல மக்கள்தொகைப் பெருக்கமும் நாம் அறியாமலேயே சமுதாயத்திற்கு கேடு உண்டாக்கக் கூடியவை. சீர்திருத்தக்காரன் என்றால் கடவுளை நம்பாதவன், பண்பில்லாதவன், அடக்கமில்லாதவன், அகந்தையுடையவன் என்றெல்லாம் பொருள் கொள்ளுதல் கூடாது. சாதி, மத, இன, மொழி முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட தேசியக் கண்ணோட்டமும், ஒற்றுமை மனப்பான்மையும்தான் நம் நாட்டை வளமிக்கதாக உருவாக்க வழி வகுக்கும். ஒரு மனிதன் இறந்தபிறகு அவனை அந்த நாடு மறக்காமல் போற்றினால்தான் அவன் புகழ் பெற்றவனாகின்றான். எல்லோரும் நமக்கு வேண்டியவர்கள்தான்; ஆனால் எங்கே யாரை வைக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். குடும்பத்தில் கலகம் விளைவிப்பவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. ஒரு மனிதனின் எண்ணமும், நோக்கமும் மட்டுமே நல்லதாக இருந்தால் மட்டும் போதாது. செயலும், பண்பாட்டுடன் இருக்க வேண்டும் இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் நாட்டில் நல்லவை நடக்கு
ம்.